Monday, October 6, 2008

பெரியார் பிறந்த நாள் விழா காட்சிகள்

பெரியார் பிறந்த நாள் விழா காட்சிகள்























Monday, August 18, 2008

வருகிறது அபாயம் !வருகிறது அபாயம் ! எதிர்கொள்eத்தயாரா?

அன்பான உழைக்கும் தமிழ் மக்க¼e! எந்த காலத்திலும் இல்லாத அeவிற்கு இப்போது பார்ப்பன பனியா கூட்டங்கள் நமது நாட்டுக்கு புதிய பொருளாதாரம் என்னும் பெயரில் சந்தையை திறந்து உள்eனர். கடந்த 10 ஆண்டுகளாகவே பெரியாரிய மற்றும் (மார்க்சிய லெனினிய) அறிஞர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வழக்கம் போல் அரசுகள் இரும்பு காதுகளாகவே உள்eன. அதன் விçeவு இன்று ரிலையன்ஸ் பிரஸ் என்னும் பனியா நிறுவனம் சில்லறை வியாபாத்தில் நுழைந்துள்eது.ஆம்! இனி காய்கறியும், மளிகை சாமானும், ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற ஏகபோக பன்னாட்டு நிறுவன கடைகளில்தான் வாங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறு விவசாயிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக வாழ்விழக்கும் நிலை ஏற்படும் ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட இந்திய சிறு தொழில்களின் எண்ணிக்கை 72000க்கும் மேல் என்று கணக்கிடப்படுகிறது. இப்போது வியாபாரிகçeயும் விவசாயிகçeயும் இந்தகணக்கில் சேர்க்கும் அவலம் நடந்துக் கொண்டிருக்கிறது.வால்மார்ட்டும், அம்பானியும், நேரடியாக கிராமங்களில் கொள்முதல் நிலையங்கçe ஆரம்பித்து காய்கனிகçe நேரடியாக விற்கப்போகிறார்கள். இனி காந்திசந்தையும், தரைக்கடையும் வியாபாரிகளும், தள்ளுவண்டி சிறுவியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாeர்களும் வாழ்விழக்கும் அபாயம் நேர்ந்துள்eது. அரசும் தெரிந்தே இதை அனுமதிக்கிறது. பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும், மற்றும் ஒடுக்கப்பட சிறுபான்மையோரம் தானே தவிர பார்ப்பானோ, மார்வாடியோ அல்ல.அப்படி பார்ப்பானோ, மார்வாடியோ பாதிக்கப்படுவர் என்றால் ரிலையன்சையும், வால்மார்ட்டையும் அனுமதிப்பார்களா?சிந்தியுங்கள் தமிழர்க¼e!இனியும் நான் சாதியாக் பிரிந்திருக்க வேண்டுமா?அல்லது தமிழர்களாய் ஒன்றுபட வேண்டுமா? இனியும் சாதியாய், மதமாய் பிரிந்து நமது கடைசி கோமணத்துணியையும் பறிக்கொடுப்பதற்கு முன் தமிழராய் ஒன்றியணைவோம்! பார்ப்பன பனியா பன்னாட்டு நிறுவனங்கçe விரட்டி அடிப்போம்!! நம் மண்ணையும், மக்கçeயும் காப்போம்.போனவன், வந்தவன் எல்லாம் கால் தூக்க நம் தேசம் என்ன தெருக்கல்லா?விவசாய, வியாபார, சுமைதூக்கும் தோழர்க¼e! சாதி மத அரசியல் சீர்கேடுகçe தட்டிக் கேட்க உலகமக்கçeப் போல் நம் மக்கçeயும் மானமும் அறிவும் உள்e சமுகமாய மாற்ற துணிவு கொண்ட இçeஞர்கçe பெரியார் தத்துவ மையம் இரு கரம் கூப்பி அழைக்கிறது.வாருங்கள் தோழர்க¼e ! புது உலகம் படைப்போம்.

இனம் என்பது வாழ்வு ‡ சாதி என்பது இழிவு

கூலி உயர்வுக்கோ, உத்தியோக பங்குக்கோ, நாட்டு சுதந்திரத்திற்கோ, பொது உடைமைக்கோ, அல்லது வேறு எந்தக் காரியத்துக்கு ஆகக் கூடியிருந்தாலும் சரி, நீங்கள் உங்கçeப் பற்றிய ஒரு உண்மையை மாத்திரம் மறந்து விடாதீர்கள்.
அதாவது நீங்கள் கீழ்ஜாதி என்றும், பஞ்சமர் (றீளீ & றீவீ) என்றும் இழி மக்கள் என்றும் ஹரிஜனங்கள் என்றும் இழிவாகக் கருதப்பட்டு அழைக்கப்பட்டு வருவது மாத்திரமல்லாமல், அந்தப்படி மதம், அரசியல் ஆதாரங்களும் அதாவது சாஸ்திரம் சமயம் முதலியவைகளில் ஸ்திரப்படுத்தியும் நடவடிக்கைகளில் இழிமக்களாக நீங்கள் பெரும்பாலோர் நடத்துப்பட்டு வருவதோடு அதன் பயனாக நீங்கள் மற்ற மக்கçeக் காட்டிலும் சமுதாயம் கல்வி, பொருளாதாரம், வாழ்வு முதலியவைகளில் கடையராய் கீழ்த்தரமுள்eவர்களாய் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த இழிநிலை, கடை நிலை, தடை நிலை நீங்க, நீங்க வைக்க இன்று உங்கள் வசமோ, அல்லது வேறு உங்களுக்காகப் பாடுபடுகின்ற வேறு யார் வசமோ, எவ்வித சாதனமும் திட்டமும் முயற்சியும் இல்லை.
இன்று மாத்திரம் அல்லாமல் பஞ்சமன் (றீளீ & றீவீ) சண்டாeன் இழி மகன், கடையன் என்கின்ற மக்கள் பிறவியினால் என்று உண்டாக்கப்பட்டார்க¼ளா, அன்று முதல் உங்கள் இழிவு நீங்க வழி யாரிடமும் எந்தக் கடவுளிடமும் எந்த கடவுள் பக்தர், ஆழ்வார், நாயன்மார், மாகத்மாரி´ என்பவர்களிடம் எந்த அவதாரத்திற்கும் எந்த ஜனநாயக ஆட்சி ராமராஜ்ய சாம்ராஜ்யத்தினிடமும் இல்லை. இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு இதற்குப் பரிகாரம் தேட கொள்கை, திட்டம் வகுங்கள்.
அதை விட்டுவிட்டு சர்க்காரிடம் உத்தியோகம், படிப்பு, கடமை, கூரை, குடிசை மிராசுதானிடம் 2 படி நெல் உயர்வு என்பதெல்லாதம் அதற்கு யாதொரு பலனும் அளிக்காது என்பததோடு உங்களுக்கு இந்த உத்தியோகம் முதல் கூலி வரை சம்பாதித்துக் கொடுக்கிறேன் என்கின்ற தரகர்களுக்கும் ஏதோ ஒன்று இரண்டு வாயாடி தந்திரக்காரர்கள் இரண்டு கோனை எழுத்தும், எழுதும் ஆங்கிலம் படித்தவனுக்கு உத்தியோக எலும்பும் அல்லாமல் வேறு பயன் ஏதும் விçeயப் போவதில்லை.
நீங்கள் ஏன் பஞ்சமன், எப்படிப் பஞ்சமன் என்பது தெரிந்தால் தான் நீங்கள் மனிதர்களாக வாழ. மற்ற மனிதர்களுக்கு நீங்கள் உரிமை கொடுக்கக் கூடியவர்களாக வாழ முடியும். அதில்லாமல். நீங்கள் 4‡வது ஜாதி, 5‡வது ஜாதி, மற்ற ஒருவர் முதலாவது ஜாதி, இரண்டாவது ஜாதி என்பது சட்டத்தில் சாஸ்திரத்தில் சாமிகளிடத்தில் இருக்கும் வரையில் பிச்சை கேட்கத்தான் முடியும்.
ஆகவே அந்த உண்மை உங்களுக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களின் அனேகம் பேர் அதாவது 100‡க்கு 95 பேர்களுக்கு வீடு இல்லை. 100‡க்கு 99 பேர்களுக்கு உத்தியோகம் உடலுழைப்பும் இல்லாத கஷ்டமும் இழிவுமான வேலை இல்லாத வேலை இல்லை.
நீங்கள் அநேகர் வாழ்வுக்காக இந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி இருக்கிறீர்கள். சாக்கடை தள்ளுவது, கக்கூஸ் எடுப்பது, பிணம் சுடுவது, சுடுகாடு காப்பது முதலிய ஈன வேகை என்பவைகçeயயல்லாம் செய்வதில் உள்e 100 பேரும் நீங்க¼e.
இந்தப்படி ஏன் இருக்க வேண்டும்? உங்கçeத் தவிர வேறு எந்த ஜாதியானவது அதாவது முதல் ஜாதி பிராமணனாவது அவனுக்கு அடுத்தவனாக இரண்டாவது ஜாதி சைவனாவது இந்த இழிவேலை செய்கிறானா? படிப்புக்குத் தொங்குகிறானோ? ஜீவனத்துக்குக் கக்கூஸ் எடுக்க மூட்டை தூக்க வேறு நாட்டுக்கு ஓடுகிறானா?
இந்த அடிப்படையினை அறிந்து அதற்கு மருந்து தேடாமல் தற்கால சாந்திக்குக் கூட பயன்படாத மந்திரி, செகரட்டரி உத்யோகம் படிப்பு, இரண்டு படி கூலி நெல் உயர்வு என்று திரிகிறீர்க¼e! இது அறிவுள்e காரியமாகுமா? மானமுள்e காரியமாகுமா? உங்கள் தலைவர்கள் யார்தான் ஆகட்டும். உங்கçeக் காட்டி அதாவது நொண்டிப்பிள்çe நோய் கொண்ட பிள்çe, குருடு, குஸ்டம் உள்e பிள்çeயைக் கூட்டங்களில் காட்டி காசு சம்பாதித்துக் கொண்டு பிள்çeக்குப் பால் வாங்கிக் கூட ஊற்றாமல், புண்ணுக்கு மருந்து கூட போடாமல் மேலும் இçeக்கும்படி செய்து மற்றவர்களுக்குக் காட்டி உடனே பயன்படும்படி செய்து கொள்வது போல் உங்கçeப் பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு நன்மை என்ன செய்தார்கள்?
நான் சொல்வதைச் சிந்தியுங்கள். உங்களுக்குப் பிடித்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உடனே தள்ளிவிடுங்கள். உங்கçeக் கொண்டு உங்கçeக் காட்டி பதவி பெறும் வயிறு வeர்க்கும் ஆட்கள் பேச்சைக் கேட்டு என் மீது கோபியாதீர்கள்.
பெரியார் ; 10.7.47 ‡ விடுதலை

தமிழிசை ஏன்?

தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்கçeப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூற வேண்டும்? என்று கேட்கிறேன். அதிலும், தமிழன் இப்படிக் கேட்பதை தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள் தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான். பாட்டுக் கேட்பவன் தமிழில் பாட்டுப்பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.
தமிழரென்றும் தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்க¼e, தமிழில் பாட வேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் ‡ தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்யவர்களா, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யுபடியான மாதிரியில் வeரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும் இப்படிப்பட்ட இவர்கள் தங்கçeத் தமிழர்கயeன்று சொல்லிக் கொள்eக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப் போகும் என்றால் மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்கçe விட இராஜா சர். அண்ணாமலை செட்டியார், சர். சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அeவு கçe அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன். காது, கண் மனம் ஆகியவை எல்லா வி­யங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்று போல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த வி­யமாகும்.
தமிழில் பாடு என்றால் சிலர் அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபனை சொல்ல வந்ததாலேயே தமிழ் இசை இயக்கம் வகுப்பு துவே­த்தையும் உண்டுபண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வeர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.
இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிக்கைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகே தான் இது ஒரு இயக்கமாக விeங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்கçe நிர்ப்பந்தப்படுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும் போது பந்தோபஸ்துக்கு ஆண்கçeக் கூட்டிக் கொண்டு போக வேண்டியதாயும் ஏற்பட்டு விட்டது. பாட்டுப் பிழைப்புக்காரரான சிலர் மீது தமிழர்களுக்கு வெறுப்புக் கூட ஏற்படும்படியாக நேர்ந்து விட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்கçe விட்டு விலகினாலும் விலகிவிடலாம். அல்லது அவர்க¼e அதை விட்டு விலகினாலும் விலகி விட நேரிடலாம் என்று கூடக் கருதவேண்டியதுமாகிவிட்டது.
பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்க வேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்குஇயல்கலை அபிவிருத்தியுமாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத புரியாத மொழியில், தமிழன் பாட்டுக் கேட்க வேண்டும். இதற்குப் பேர்தான் கலை வeர்ச்சியாம்! மற்றும் தமிழனுக்குத் தமிழ் வேண்டும் தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும் கலைத் துரோகம் வகுப்புத் துவே­ம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம் பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும், எழுதுவது போல் தமிழனுக்குத் தமிழனல்லாதவன் தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் தேசாபிமானம் மொழியபிமானம் கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய் விட்டதேயாகும்.
தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வeர்ச்சியடைய வேண்டுமானால் தமிழன், காரியத்தில் தமிழனல்லாதவன் அவன் எப்படிப்பட்டவனாலும்" தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்.
தந்தை பெரியார் ‡ "குடியரசு" 19‡02‡1944

பெரியார் தத்துவ மய்யம்

அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக்கொள்eத்தக்கதாக இல்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு சமூகம் என்று சொல்வதற்குரிய அடிப்படை காரணிகçeயே தவறாக புரிந்துக்கொள்வதாகும். நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவன் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்ககூடாதவனாகி விடுவதும் இல்லை; மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள்.
இரண்டாவதாக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்ததன்மை மட்டுமே மனிதர்கçe ஒரு சமூகமாக ஒன்றிணைக்க போதுமானதல்ல. ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே சமூகம் ஒன்று உருவாக போதுமானதாகாது. மக்கள் தங்களுக்குள் பொதுமை தன்மைகçe கொண்டிருக்கும்போது தான் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மக்கள் ஒத்ததன்மையை பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றை பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது. ஒருவர், பிறருடைய செயல்பாடுக¼ளாடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது. அவை ஒத்த தன்மையனவாக இருந்தாலும், இணையான செயல்கள் மக்கçeச் சமூகமாக ஒன்றிணைக்காது. பலவகை ஜாதிகçeச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு. திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு ஜாதியினர் ஒன்று கலவாமல் கொண்டாடுவதால் ஜாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணையவேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் , பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன.கூட்டு நடவடிக்கை களில் தனிமனிதன் பங்குபெறவும்,பகிர்ந்து கொள்eவும் நேரும் போதுதான் அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்கçe ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது. ஜாதி முறையோ, இவ்வாறு கூடிச் செயலாற்றுவதை தடுப்பதால் ஜாதி முறை, இந்துக்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, உணர்வு கலந்த ஒரு சமூகமாக உருவாவதை தடுக்கின்றது.‡ ( டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 1 பக்கம் ‡ 72,73 )

அம்பேத்கர்118 வது பிறந்த நாள்

"" இந்து"" சமூகம் என்பதே வெறும் கற்பனை என்பது தான். இந்து என்ற பெயரே ஓர் அந்நியப் பெயர்தான். இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்கçe தனித்துக் காட்டுவதற்கு முகமதியர் வைத்த பெயர் தான் இந்து என்பது. முகமதியரின் படையயடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் இந்து என்ற சொல் காணப்படவில்லை. இந்துக்களுக்கு பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்கு பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை.
சொல்லப்போனால் இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை ; இருப்பதெல்லாம் பல ஜாதிகளின் தொகுப்பே ஆகும். ஒவ்வொரு ஜாதியும் தான் ஒரு தனித்த ஜாதியாக இருப்பதாகவே உணருகின்றன. ஒரு ஜாதி என்ற அeவில் தான் இருப்பது பற்றிய உணர்வு மட்டுமே ஒவ்வொரு ஜாதிக்கும் முதலும், முடிவுமான குறிக்கோளாக உள்eது. பல ஜாதிகளும் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்து‡முஸ்லீம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் பிற ஜாதிக¼ளாடு தம் ஜாதிக்கு உறவு உண்டு என்று எந்த ஜாதியினரும் உணருவதில்லை.
மற்ற சமயங்களில் ஒவ்வொரு ஜாதியும், பிற ஜாதிகளிடமிருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்eவும், வேறுபடுத்திகாட்டிக் கொள்eவுமே முயல்கின்றன. சமூகவியலார் கூறும் ""குழு உணர்வு"" இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் ஜாதி உணர்வு மட்டும்தான்; இதனால் இந்துக்கçe ஒரு சமுகமாகவோ அல்லது நாடகவோ கொள்eமுடியவில்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான வடிவமற்ற மக்கள் கூட்டமாக உள்eனர்.
எனினும், இந்த உண்மையை இந்தியர்களுள் பலர் தம் நாட்டுப்பற்று காரணமாக ஏற்றுக்கொள்e மறுக்கிறார்கள். வெளிப்படையாக தெரிகின்ற வேற்றுமை களுக்கிடையில் இந்திய நாடு முழுமைக்கும் பரவி காணப்படும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றால் அமைந்த அடிப்படை ஒருமைப்பாடு இந்துக்களின் வாழ்க்கையை அடையாeம் காட்டுவதாக உள்eதென இவர்கள் வலியுறுத்தி கூறுகின்றனர்.
பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் ஒத்ததன்மை இருப்பதென்னவோ உண்மைதான். இதனால் இந்துக்கள் ஒரு சமூகமாக அமைகின்றனர் என்ற முடிவு ஏற்றுக்கொள்eத்தக்கதாக இல்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்வது ஒரு சமூகம் என்று சொல்வதற்குரிய அடிப்படை காரணிகçeயே தவறாக புரிந்துக்கொள்வதாகும். நெடுந்தொலைவில் இருப்பதால் ஒருவன் தன் சமூகத்தில் உறுப்பாக இருக்ககூடாதவனாகி விடுவதும் இல்லை; மனிதர் பலர் நெருங்கி வாழ்வதால் மட்டும் அவர்கள் ஒரே சமூகத்தினர் என்றாகி விடவும் மாட்டார்கள்.
இரண்டாவதாக, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்ததன்மை மட்டுமே மனிதர்கçe ஒரு சமூகமாக ஒன்றிணைக்க போதுமானதல்ல. ஒரு சில அம்சங்களில் காணப்படும் ஒற்றுமை ஒன்றினால் மட்டுமே சமூகம் ஒன்று உருவாக போதுமானதாகாது. மக்கள் தங்களுக்குள் பொதுமை தன்மைகçe கொண்டிருக்கும்போது தான் ஒரு சமூகமாக உருக்கொள்கின்றனர். மக்கள் ஒத்ததன்மையை பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றை பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது. ஒருவர், பிறருடைய செயல்பாடுக¼ளாடு ஒத்த முறையில் செயல்பட்டால் மட்டும் போதாது. அவை ஒத்த தன்மையனவாக இருந்தாலும், இணையான செயல்கள் மக்கçeச் சமூகமாக ஒன்றிணைக்காது. பலவகை ஜாதிகçeச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டு. திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு ஜாதியினர் ஒன்று கலவாமல் கொண்டாடுவதால் ஜாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணையவேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் , பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல் படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன.கூட்டு நடவடிக்கை களில் தனிமனிதன் பங்குபெறவும்,பகிர்ந்து கொள்eவும் நேரும் போதுதான் அந்த கூட்டு நடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்கçe ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்குகின்றது. ஜாதி முறையோ, இவ்வாறு கூடிச் செயலாற்றுவதை தடுப்பதால் ஜாதி முறை, இந்துக்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, உணர்வு கலந்த ஒரு சமூகமாக உருவாவதை தடுக்கின்றது.‡ ( டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு : தொகுதி 1 பக்கம் ‡ 72,73 )

Tuesday, April 22, 2008

untouchability

இடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா

நாய் பன்னி
ஆடு மாடு எருமை கழுதை
கோழி கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள்
எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று
என்னிடம் புகாரேதும் இல்லை
இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.

ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.

ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.

சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’

Wednesday, April 16, 2008

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் : உண்மையா?

பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றும், பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைக்கப்போய் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் வந்துவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்களே, உண்மையா?

பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததை அந்தக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, சிலையை பெரியார் உடைத்ததற்கான சமூகக் காரணத்தைத்தான் விளக்கவேண்டுமே தவிர பெரியாரை அல்ல. மூடநம்பிக்கை கரைபுரண்டோடி, மொத்த சமூகத்தையும் அடித்துப் புரட்டுகிறபோது, அதைத் தடுத்த நிறுத்த, கைக்கு கிடைத்ததையெல்லாம் பயன்படுத்துகிற பதற்றம் பெரியாருக்கிருந்தது.மக்களிடம் மூடநம்பிக்கை எந்த மட்டத்தில் இருக்கிறதோ அந்த மட்டத்தில் போய் பெரியார் அதை மறுத்துக் காட்டினார். ‘கடவுளுக்கு எல்லாவற்றையும் காப்பாற்றும் சக்தி இருக்கிறதென்றால், நான் கடவுளை உடைக்கிறேன், முடிந்தால் அவர் அவரையாவது காப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று சொல்லும் விதமாகத் தான் பிள்ளையார் சிலையை உடைத்தார். ‘என்னை கடவுள் படைத்தார், அவர் தான் என் தலையெழுத்தை எழுதி என்னைக் காப்பாற்றுகிறார்’ என்ற மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்காகத் தான் அவர் அதைச் செய்தார்.எந்த ஒரு தத்துவமும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் கடவுள் என்கிற தத்துவம் மட்டும் மக்களை பயமுறுத்தி மூடனாக மாற்றுகிறது. எனவே அதிலிருந்து மக்களை மீட்பதற்கு தன்னாலான வழிகளை அவர் செய்தார். அதை வறட்டு நாத்திகவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. தெருவுக்குத்தெரு பிள்ளையார் வைத்தவர்கள் யார்? ஏற்கனவே பிள்ளையாரை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்தானே? பெரியார் செயல்பாட்டில் கடுப்பாகிப் போய் எந்த நாத்திகனும் ஆத்திகனாகிவிடவில்லையே? பெரியாரே சொல்வதுபோல், வேறெவரும் இந்தக் காரியங்களை செய்வதற்கு முன்வராததால்தானே அவர் செய்ய வேண்டியதாயிருந்தது?பெரியார் பேசியது வறட்டுத்தனமான நாத்திகம் என்றே வைத்துக்கொள்வோம். அதை நிராகரித்துவிட்டு விஞ்ஞானப்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பரப்புவதை யார் தடுத்தார்கள்? ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் இந்துமதத்தினருக்கு மட்டுமேயானது மாதிரி பூசை, புனஸ்காரங்கள் அங்கே நடக்கிறது. இந்துக்கடவுள்களின் விக்கிரகங்களும் சிலைகளும் இல்லாத அலுவலகமே கிடையாது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நடக்கிறது. அங்கிருக்கிற தொழிற்சங்கங்கள் உணர்வுமட்டம் தாழ்ந்துபோய் இதிலெல்லாம் பங்கெடுப்பதாய் மாறிவரும் கொடுமை நடக்கிறது. மத உணர்வுகள் பாதிக்கப்படும்னு சொல்லி எந்த இடத்திலும் நாம் நாத்திகம் பேசுவதில்லை, பகுத்தறிவு பற்றியும் பேசுவதில்லை, விஞ்ஞானக் கண்ணோட்டத்தை வலியுறுத்துவதில்லை. இப்போது யோசித்துப் பாருங்கள், பெரியார் செய்தளவுக்கு நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று

கீற்று இணையதளத்தில் திரு.ஆதவன்தீட்சண்யா அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

Posted by நாளை விடியும் at Wednesday, December